தேர்தல் அலுவலர்களுக்கு ஆட்சியர் தலைமையில் பயிற்சி

ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் நடத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. தற்போது மனுத்தாக்கல் பணிகள் நடந்து வருகின்றன. ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 230 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகளை தமிழக தேர்தல்துறை செய்து வருகிறது.

இந்த இடைத்தேர்தல் பணி களுக்காக 1,500 பேர் நியமிக் கப்பட்டுள்ளனர். இவர்களில் மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட முதன்மை அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்த பயிற்சி சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் நேற்று முன்தினமும், நேற்றும் வழங்கப்பட்டது.

இதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை கையாளு தல், முக்கியமான தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்வது, வாக்குப்பதிவு நடக்கும் போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பற்றி விரிவாக பயிற்சி அளிக் கப்பட்டது. இவர்களுக்கு வட்டாட் சியர் நிலையில் உள்ளவர்கள் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகு மீனாள் பங்கேற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்