வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 பேர் பலி

By செய்திப்பிரிவு

அச்சிறுப்பாக்கம் அருகே நேற்று நடைபெற்ற வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன்(23). லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர், சென்னையிலிருந்து இரும்பு தகடுகளை லாரியில் ஏற்றி கொண்டு திண்டிவனம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள கடமலைபுத்தூர் பகுதியில் சென்றபோது லாரி திடீரென பழுதாகி நின்றது.

அதிகாலை நேரம் என்பதால், பழுதை சீரமைக்க முடியவில்லை. இதனால், லாரியின் அருகே அருண்பாண்டியன் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, சென்னையி லிருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற மினிலாரி ஒன்று லாரியின் பின்னால் மோதியது. இதில், லாரிக்கு அருகில் படுத்திருந்த அருண்பாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், மினிலாரியில் ஓட்டுநர் அருகே அமர்ந்துவந்த ரமேஷ் (32), என்பவர் இரும்புதகடுகள் வெட்டியதில் அதே இடத்திலேயே இறந்தார்.

மற்றொரு விபத்து

இதேபோல், சென்னையி லிருந்து சேலம் நோக்கிச் சென்ற மினி லாரி ஒன்று, முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த லாரி ஒட்டுநர் தர்(30) சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த அச்சிறுப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உடல்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்