பெரம்பலூர் அருகே நேற்று நேரிட்ட சாலை விபத்தில் திரைப் பட இயக்குநர் சரவணன் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் சரவணன் (35). எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கி உள்ளார். இவரது உறவினர் கவுதமன் (24), உதவி இயக்குநராக உள்ளார்.
சரவணனின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் வரகூருக் குச் செல்வதற்காக, நேற்று சென்னையிலிருந்து இருவரும் காரில் புறப்பட்டனர்.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகேயுள்ள வ.களத்தூர் பிரிவு சாலையில் வந்தபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால், கார் நிலைதடுமாறி சாலை தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் காயமடைந்த சரவணன், கவுதமன் ஆகிய இருவரும் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
பின்னர், இருவரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago