தொழிலதிபரின் மனைவி, குழந்தைகளை கடத்த திட்டம்: 2 பேர் கைது

தி.நகர் பர்கிட் சாலையை சேர்ந்தவர் சம்சூதீன் (45). மண்ணடி ஜோன்ஸ் சாலையில் இரும்பு விற்பனை செய்து வருகிறார். கடந்த மாதம் 30-ம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், “உன்னுடைய மனைவி மற்றும் குழந்தை களை கடத்த திட்டமிட்டிருக்கிறோம். ரூ.20 லட்சம் கொடுத்தால், அவர்களை கடத்த மாட்டோம். நாங்கள் சொல்லும் இடத்துக்கு தனியார் காரில் வந்து பணத்தை தரவேண்டும்” என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டித்தார். இதையடுத்து அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீஸாரின் ஆலோசனைப்படி, நேற்று மதியம் சம்சூதீன் காரில் பணத்துடன் மண்ணடி பகுதிக்கு சென்றார். மர்ம நபர்கள் இரண்டு பேர் வந்து அவரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு காரில் புறப்படத் தயாராக இருந்தனர். அப்போது அங்கிருந்த போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் பெயர் அசன் மற்றும் தமீம் அன்சாரி என்பதும் தெரியவந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE