சென்னையில் சிறுவன் அடித்துக் கொலை: மாணவர்கள் உட்பட 3 பேர் கைது

பெரம்பூர் பேரக்ஸ் சாலையை சேர்ந்தவர் பாத்திமா. இவரது மகன் அப்துல் கபூர் (17). 8-ம் வகுப்பு படித்துவிட்டு குடும்ப வறுமை காரணமாக, புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் அருகே உள்ள தனியார் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் கடைக்கு 3 பேர் வந்தனர். பெல்டை விலை பேசுவதுபோல் பேசியவர்கள், திடீரென அதை திருடிக் கொண்டு வெளியே ஓடினர்.

இதனைப் பார்த்த அப்துல் கபூர், அவர்களை விரட்டிச் சென்று பிடித்தார். ஆத்திரமடைந்த 3 பேரும், அப்துல் கபூரை சரமாரியாக அடித்து உதைத்து கீழே தள்ளினர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து 3 பேரையும் பிடித்தனர். தலையில் பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் இருந்த அப்துல் கபூரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், சிறுவன் அப்துல் கபூர் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.

பொதுமக்களால் பிடிக்கப்பட்ட 3 பேரும் கீழ்ப்பாக்கம் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2 பேர் பாலிடெக்னிக் மாணவர்கள் என்பதும் மற்றொருவர் கொளத்தூரை சேர்ந்த சாரீஷ் (19) என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்