ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஏன்?- கனிமொழி விளக்கம்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை திமுக புறக்கணிப்பது ஏன் என்பது குறித்து சென்னையில் அக்கட்சி எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் விவரித்தார்.

அப்போது அவர், "வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை திமுக புறக்கணித்துள்ளது. இதற்குக் காரணம் ஆளும் கட்சியால் அரசு இயந்திரங்கள் துஷ்பிரயேகம் செய்யப்படுவதே.

தமிழகத்தில் இடைத்தேர்தல் எப்படி நடைபெறுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எனவே ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயேகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இந்தத் தேர்தலை நாங்கள் புறக்கணித்துள்ளோம்.

நாங்கள் மட்டுமல்ல பாமக, மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன" இவ்வாறு கனிமொழி கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE