தமிழகத்தில் அனைத்து மாவட்டங் களிலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று முன்தினம் தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பரவலாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்கிய முதல் நாளே தமிழகத்தின் பல இடங் களில் மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டம் தொழுதூரில் அதிகபட்ச மாக 9 செ.மீ. மழை பெய்தது. திருச்சியில் 7 செ.மீ., சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, புதுக் கோட்டை மாவட்டம் இலுப்பூரில் 6 செ.மீ., தருமபுரி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் ஆகிய இடங் களில் 5 செ.மீ., கரூரில் 4 செ.மீ. மழை பதிவானது.
மாநிலத்தில் வெயில் சற்று குறை வாகவே இருந்தது. அதிகபட்சமாக பாளையங்கோட்டை மற்றும் கடலூரில் 37.5 டிகிரியும் கரூரில் 37, வேலூரில் 36.9, தருமபுரியில் 35.5, சென்னையில் 35.2 டிகிரி பதிவாகியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago