நாளை முதல் எஸ்எஸ்எல்சி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம்

எஸ்எஸ்எல்சி தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நாளை முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுத் துறையின் இணை இயக்குநர் (பணியாளர்) கே.தேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதிய மாணவர்களுக்கும், தனித் தேர்வர்களுக்கும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 29-ந் தேதி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இந்நிலையில்,வியாழக்கிழமை (நாளை) முதல் மாணவர்கள் தாங்களே தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வுத்துறையின் இணையதளத்தில் ( >www.dge.tn.nic.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த இணையதளத்துக்குள் சென்று தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துவிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்