சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி தமிழக முதல்வரும் அதிமுக வேட்பாளருமான ஜெயலலிதா தொகுதியில் மேற்கொள்ளவிருக்கும் பிரச்சார பயணம் தொடர்பான குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "27.6.2015 அன்று நடைபெற உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ நாடு முதல்வர் ஜெ.ஜெயலலிதா 22.6.2015 - திங்கட்கிழமை அன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் கீழ்க்கண்டவாறு தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
எம்.ஜி.ஆர். சிலை - பெட்ரோல் பங்க் காசிமேடு, சூரிய நாராயண செட்டி தெரு, வீரராகவன் ரோடு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை கிராஸ் ரோடு ஜங்ஷன் அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு, வைத்தியநாதன் சாலை வைத்தியநாதன் பாலம், எண்ணூர் நெடுஞ்சாலை (ரயில்வே கிராசிங்) மணலி சாலை எழில் நகர் ஆகிய பகுதிகளில் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு, எண்ணூர் நெடுஞ்சாலை ஜங்ஷன் ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இவரைத் தவிர சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), டிராஃபிக் ராமசாமி (சுயேச்சை) உள்ளிட்ட 27 பேர் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago