மூளைச்சாவு அடைந்த ஒரு இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதில் ஐந்து பேருக்கு மறு வாழ்வு கிடைத்துள்ளது.
திருத்தணியைச் சேர்ந்தவர் துரைராஜ் (22). அவர் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவர் கடந்த 5-ம் தேதி திருத்தணி நெடுஞ்சாலையில் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது சாலை விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
அவர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு மருத்துவர்களால் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முன் தினம் இரவு 7.30 மணிக்கு மூளைச்சாவு அடைந்தார். அவரது உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன் வந்தனர். அதன் பேரில் அவரது உறுப்புகள் ஐந்து பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன. அவரது கல்லீரல் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும், 2 சிறுநீரகங்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை நோயாளிகள் இருவருக்கும், 2 கண்கள் எழும்பூர் கண் மருத்துவமனை நோயாளிகள் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago