ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மீண்டும் பரிசோதனை: அலைக்கழிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனைக்கும் புழல் சிறைக் கும் அவரை அலைக்கழிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சிறுநீரகத் தொற்று பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சிகிச்சை அளிப்பதற்காக, அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

கடந்த 8, 11, 18 ஆகிய தேதிகளில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், பேரறிவாளனுக்கு சிறுநீரகத் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவருக்கு மருந்து, மாத்திரை கொடுத்த டாக்டர்கள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி பரிந்துரை செய்தனர். இதையடுத்து கடந்த 19, 22-ம் தேதிகளில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக பேரறிவாள னுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வலியால் அவதிப்பட்ட பேரறிவாளனை போலீஸார் நேற்று முன்தினம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்து விட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி மீண்டும் பரிந்துரை செய்து அனுப்பிவிட்டனர். இதைத் தொடர்ந்து அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீ ஸார் நேற்று அழைத்து வந்தனர்.

ஆனால், அவரை மருத்துவ மனையில் அனுமதிக்காமல், புறநோயாளி பிரிவிலேயே பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். அதன்பின் பேரறி வாளனை போலீஸார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே, ‘‘மருத்துவ மனைக்கும் புழல் சிறைக்கும் அலைக்கழிக்கப்படுவதால், பேரறி வாளனின் உடல்நிலை இன்னும் மோசமாக வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவரை மருத்துவமனை யில் உள்நோயாளியாக அனு மதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர் களிடம் கேட்டபோது, ‘‘பேரறிவாள னுக்கு மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகளை உள்நோயாளியாக அனுமதித்து செய்ய வேண்டியதில்லை. புற நோயாளியாகவே செய்துவிட லாம். அதனால்தான் அவரை உள்நோயாளியாக அனுமதிக்க வில்லை. இன்றுகூட (நேற்று) பேரறிவாளனுக்கு விந்து பையில் இருந்து நீர் எடுத்து பரிசோதனை செய்துவிட்டோம். இந்த பரிசோதனை முடிவு வரும் 29-ம் தேதி கிடைக்கும். பரிசோதனை முடிவை வாங்குவதற்காக அவரை போலீஸார் அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்