திருமண வீட்டில் மணப்பெண் ணின் நகைகளை திருடிய கால் டாக்ஸி டிரைவர் கைது செய்யப் பட்டார்.
சென்னை மேற்கு மாம்பலம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ஜெயபால்(32). கால் டாக்சி டிரைவர். கடந்த 8-ம் தேதி தி.நகர் தெற்கு போக் சாலையில் கிருஷ்ணசாமி மண்டபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. மணமகள் வீட்டார் மண்டபத்தை காலி செய்து மடிப்பக்கம் செல்ல ஜெயபாலின் கால் டாக்சியை வாடகைக்கு அமர்த்தினர். வீட்டுக்கு சென்று இறங்கியவுடன் திருமண வீட்டார் பையைப் பார்த்தபோது மணப்பெண்ணின் 30 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து மாம்பலம் போலீ ஸில் புகார் அளித்தனர். போலீஸார் திருமண மண்டப கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, கால்டாக்சி டிரைவர் ஜெயபால், நகை மற்றும் பணத்தை எடுத்து மறைத்து வைப்பது தெரிந்தது. அதைத் தொடர்ந்து ஜெயபாலை போலீஸார் பிடித்து விசாரிக்க அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அவரது வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயபாலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago