மெரினா கடற்கரையில் கடைகள் முறைப்படுத்தும் பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.
சென்னை மெரினா கடற்கரை யில் உள்ள கடைகளை சீராக முறைப்படுத்த மாநகராட்சி கடந்த சில நாட்களாகவே முயன்று வருகிறது. ஆனால், கடைகளை வேறு இடத்துக்கு மாற்றினால் வியாபாரம் பாதிக்கும் என்று மெரினாவில் உள்ள கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், முறைப்படுத்தும் பணி தாமதமாகி வந்தது.
அதன் பின், மாநகராட்சியின் உறுதியான நடவடிக்கையால் மெரினாவில் கடைகளை முறைப் படுத்தும் பணி தொடங்கியது. மெரினாவின் உட்புறச் சாலையையொட்டி அமைந்துள்ள கடைகளை மணற்பரப்பிலிருந்து கடலை நோக்கி அமைத்து வருகின்றது மாநகராட்சி. அங்குள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் 10 அல்லது 15 வரிசைகளில் சீராக முறைப்படுத்தப்படவுள்ளன. நேற்று முன் தினம், ஒரு சில கடைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டன. அதை தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக மேலும் சில கடைகள் முறைப்படுத்தப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago