ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமி களின் 81-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நேற்று 105 ஏழை ஜோடிகளுக்கு சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமி கள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரது உத்தரவின்பேரில், ஜெயேந்திரரின் 81-வது பிறந்தநாள் விழா வருகிற ஜூலை மாதம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.
இலவச திருமணம்
இதையொட்டி, அகில இந்திய ஜனகல்யாண் சார்பில் நேற்று 105 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மடத்தின் சார்பில் மணமக்களுக்கு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு தலைமை வகித்த ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் பேசும்போது, "மணமக்கள் அனைவரும் மகிழ்ச்சி, நல்லொ ழுக்கத்துடன், தான தர்ம காரி யங்களில் ஈடுபட்டு வாழ்வில் வளம் பெற வேண்டும்" என்று வாழ்த்தினார்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, மாநிலச் செயலாளர் கே.டி. ராகவன், ஜனகல்யாண் நிர்வாகி பசுபதி உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago