அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அஞ்சலி என்ற சிங்கவால் குரங்கு குட்டி ஈன்றுள்ளது.
சிங்கத்தின் வால் நுனியில் கொத்தாக முடி இருப்பது போல், குரங்கின் வாலில் முடி இருந்தால், அத்தகைய குரங்குகள் சிங்கவால் குரங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. சிங்கத்தின் பிடரியைப் போன்ற முகம், கருமை நிறம் போன்றவற்றால் பெரும்பான்மையான பார்வையாளர்களை கவரும் இந்த சிங்கவால் குரங்கு அரிதான, அழிந்து வரும் உயிரினமாகும். இனப்பெருக்க ஒருங்கிணைப்பு பூங்காவாக வண்டலூர் உயிரியல் பூங்கா அறிவிக்கப்பட்டு, முதன் முதலாக கடந்த 1990-ல் வால்பாறை காடுகளில் இருந்து ஒரு ஆண் மற்றும் 3 பெண், 1999-ல் ஒரு பெண் என மொத்தம் 5 குரங்குகள் கொண்டுவரப்பட்டன.
இந்த குரங்குகள் இனப்பெருக்கம் செய்து இதுவரை 48 குட்டிகளை ஈன்றுள்ளன. இங்கு பிறந்த சிங்கவால் குரங்குகள், விலங்குகள் பரிமாற்ற முறையில் குவஹாட்டி, சிம்லா, டெல்லி, திருவனந்தபுரம், மைசூர், ஹைதராபாத், பரோடா, கிண்டி ஆகிய இடங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago