பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் ஓ.பி.எஸ். தம்பி உட்பட 7 பேர் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்

பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உட்பட 7 பேர் பெரியகுளம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர்.

தேனி மாவட்டம், ஜி.கல்லு பட்டியைச் சேர்ந்தவர் நாகமுத்து. இவர் பெரியகுளம் கயிலாசநாதர் கோயில் பூசாரியாக இருந்தார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வழக்கில் பெரியகுளம் நகராட்சி முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியுமான ஓ.ராஜா, தென்கரை பேரூராட்சித் தலைவர் பாண்டி, மணிமாறன் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் சாதிப் பெயரைக் கூறி திட்டியதாக ஓ.ராஜா, பாண்டி, மணிமாறன் ஆகியோர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓ.ராஜா கடந்த 24-ம்தேதி தேனி மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றார்.

இதனிடையே, இவ்வழக்கு விசாரணைக்காக ஜுன் 26-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று பெரியகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாரியப்பன் உத்தரவிட்டிருந்தார். இதனால் ஓ.ராஜா, மணிமாறன், சிவக்குமார், லோகு, ஞானம், பாண்டி, சரவணன் ஆகிய 7 பேர் பெரியகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர்.

வழக்கை விசாரித்த மாஜிஸ் திரேட் மாரியப்பன் விசாரணையை ஜுலை 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்