தங்கம் என்று நினைத்து கவரிங் நகைகளை எடுத்துச் சென்ற திருடர்கள்

வியாசர்பாடியில் தங்க நகைகள் என்று நினைத்து கவரிங் நகைகளை திருடர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் விமல்சந்த். சர்மா நகர் எஸ்.ஏ. காலனி எருக்கஞ்சேரி நெடுஞ் சாலையில் அடகு கடை வைத் துள்ளார். நேற்று காலை அவர் கடையை திறக்க சென்றபோது கடை பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடந்தது. உள்ளே ஷோகேஸில் வைக்கப்பட்டிருந்த கவரிங் நகைகள் அனைத்தும் திருடப்பட்டிருந்தன. அடகு நகைகள் அனைத்தும் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததால் அவற்றை திருடர்களால் திருட முடியவில்லை.

விமல்சந்தின் அடகு கடையில் கவரிங் நகைகளும் விற்பனை செய்வார். இது திருட வந்தவர்களுக்கு தெரியவில்லை. அவற்றை தங்கம் என்று நினைத்து திருடி சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து எம்.கே.பி.நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்