மாயமான 5 மீனவர் கதி என்ன? - குடும்பத்தினர் கவலை

By செய்திப்பிரிவு

காசிமேட்டில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று மாயமான 5 மீனவர்கள் கதி என்ன என்று தெரி யாமல் அவர்களின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.

சென்னை காசிமேடு ஜீவரத்தினம் நகர் பகுதியை சேர்ந்த கடும்பாடி, மாயாண்டி, சக்திவேல், மணி, சுரேஷ் ஆகிய ஐவரும் கடந்த 22-ம் தேதி மதியம் மீன் பிடிக்க பைபர் படகில் கடலுக்குள் சென்றனர். ஆனால் நேற்று இரவு வரை அவர்கள் கரை திரும்பவில்லை. இதுகுறித்து மீன் வளத்துறைக்கும், கடலோர காவல் படைக்கும் மீனவர்கள் தகவல் கொடுத்தனர். துறைமுகம் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.

தேடும் பணியை துரிதப்படுத்த கோரி காசிமேடு சிக்னல் அருகே கடந்த இரு நாட்களாக மீனவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மற்றும் கடலோர காவல் படை கப்பல் மூலம் மீனவர்களை தேடும் பணி 2 நாட்களாக நடந்து வருகிறது. ஆந்திராவில் உள்ள கடல் படையினருக்கும் அந்த வழியாக வரும் கப்பல்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு கடல் பகுதியில் தேடுமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்