விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல்: இலங்கை பெண் உட்பட 2 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று காலை 8.30 மணிக்கு வந்த பயணி களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த ஆஷ்மி (39) மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பெண் தனது உள்ளாடைக்குள் 3.5 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட் டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆஷ்மியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிங்கப்பூரில் இருந்து பகல் 11.30 மணிக்கு சென்னை வரும் விமானத்தில் மேலும் ஒருவர் தங்கக் கட்டிகளை கடத்தி வருவதாக தெரிவித்தார்.

மற்றொருவர் கைது

இதையடுத்து அந்த பெண் தெரிவித்தபடி 11.30 மணி விமானத் தில் வந்த இலங்கையை சேர்ந்த முகமது மன்சூர் (35) என்பவரை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அவரும் உள்ளாடை மற்றும் சூட்கேசில் 3.5 கிலோ தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் மன்சூரையும் கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்