சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 28-ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 25-ம் தேதி வெளியான நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 27-ம் தேதி வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ முதலில் அறிவித்திருந்தது. பின்னர் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 28-ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் காலை 10 மணியளவில் தெரிந்துகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்