திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்களில், ஆயிரக்கணக்கானோர் நாள் தோறும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க மற்றும் பல்வேறு பணி தொடர்பாக மீஞ்சூர் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், மீஞ்சூர் பஜாரில் பொது கழிவறை கிடையாது. எனவே, அங்கு பொதுகழிவறை அமைக்க கோரி வந்தனர்.இந்நிலையில் மீஞ்சூர் பஜார் பகுதியில் பொதுகழிவறை அமைக்க வேண்டும், பொதுமக் களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டும் எனக்கோரி மீஞ்சூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதில், சிஐடியு மாநில செயலாளர் விஜயன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ராபர்ட் எபிநேசர், மீஞ்சூர் பகுதி செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago