வட மாவட்டங்களில் பெருங்காற்றுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

By செய்திப்பிரிவு

வட மாவட்டங்களில் பெருங்காற் றுடன் மழை பெய்ய வாய்ப் புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் நேற்று வெயில் சற்று தணிந்து காணப்பட்டது. மாநிலத்தில் எங்கும் 40 டிகிரியை தொடவில்லை.

தொடர்ந்து 40 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வந்த தலைநகர் சென்னையில் நேற்று அதிகபட்சமாக 38.1 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.

கடலூரில் 39 டிகிரி, பாளையங்கோட்டை, வேலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் 38.5 டிகிரி, மதுரை மற்றும் திருச்சியில் 38 டிகிரி பதிவாகியிருந்தது.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெருங்காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

கத்தரி வெயில் 29-ம் தேதியுடன் முடிகிறது என்பதாலும், தென் மேற்கு பருவ மழை மே 30-ம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதாலும், அடுத்த சில நாட்களில் வெயில் மேலும் தணியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்