சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பைக்கு கூடுதலாக 2 விரைவு ரயில்களை இயக்க வேண்டும்: உங்கள் குரலில் வாசகர் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பைக்கு கூடுதலாக 2 விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என்று உங்கள் குரலில் வாசகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக எ.தாஜூதீன் என்பவர் ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு கூறியதாவது:

சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்து விட்டது. இதனால் வழக்கமாக இயக்கப்படும் மும்பை விரைவு ரயில், மும்பை மெயில் ஆகிய ரயில்களில் டிக்கெட்டுகள் உடனுக்குடன் விற்று தீர்ந்து விடுகின்றன. எனவே, மக்களின் தேவையை கருத்தில் கொண்டு சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பைக்கு கூடுதலாக 2 விரைவு ரயில்களை இயக்க வேண்டும். குறைந்தபட்சம் வாராந்திர விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

எனவே, பயணிகளின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து, ரயில்வே வாரியத்துக்கு அனுப்பிவைக்கப்படும்’’ என் றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 secs ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்