அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு ஒத்திவைப்பு

நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமராசாமி, கடந்த பிப். 20-ம் தேதி தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத் துறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.

இருவரின் ஜாமீன் மனுக்களை நெல்லை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய் யப்பட்டன. இந்நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3-வது முறையாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 50 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வேலுமணி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணி வாதிடும்போது, இந்த வழக்கில் சிபிசிஐடி தரப் பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வாதிட உள்ளார். அவரது வருகைக்காக விசார ணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கதிர்வேல், தற்கொலை வழக்கின் விசாரணை முடிவடைந்துவிட்டது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். பின்னர் விசாரணையை ஜூன் 1-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்