மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் சென்னையிலுள்ள முக்கிய அஞ்சலகங்களில் சிறப்பு கவுன்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வடக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கி.இரவிந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங் களை சமர்ப்பிக்க 29.05.2015 கடைசி நாள் ஆகும். எனவே, அன்றைய தினம் சென்னையிலுள்ள முக்கிய அஞ்சலகங்களில் சிறப்பு கவுன்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பார்க் டவுன் தலைமை அஞ்சலகம், அண்ணா நகர் தலைமை அஞ்சலகம், அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் அஞ்சலகம், கீழ்ப்பாக்கம் அஞ்சலகம், எழும்பூர் அஞ்சலகம் ஆகியவற்றில் 29-ம் தேதி (இன்று) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டிருக்கும்.
அந்தக் கவுன்டர்களில் பதிவு செய்யப்படுகிற பதிவு மற்றும் விரைவு தபால்களை அன்றைய தினமே உரிய விலாசங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago