ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் குரூப் 2 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்குகின்றன. விருப்பம் உள்ளவர்கள் வருகிற 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணை யம் சார்பில் ஒருங்கிணைந்த சார்நிலை பணிகள் தொகுதி 2-ல் அடங்கிய 1,241 காலிப் பணியிடங்களுக்கு ஜூலை 26-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. சென்னை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இதனை சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்து கின்றன.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான சான்று மற்றும் தங்களது வேலைவாய்ப்பக அட்டையுடன் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் (பொது), மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள் கிண்டியில் உள்ள மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் வரும் 29-ம் தேதிக்குள் நேரில் தொடர்புகொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago