சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

ஓமன் நாட்டில் இருந்து 3 கிலோ தங்கத்தை கடத்தி வந்த கேரள இளைஞரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் நேற்று கைது செய்தனர்.

மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சந்தேகத்தின்பேரில் கேரளாவைச் சேர்ந்த ஜாபர் (30) என்பவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அவர், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து, டிஆர்ஐ அதிகாரிகள் அவரைக் கைது செய்து தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, விசாரிக்கின்றனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்