சென்னை அருகம்பாக் கத்தை சேர்ந்தவர் அந்தோணி (45). இவருடைய மனைவி செல்வி (40), மகன் பிரவீன் குமார்(13). அந்தோணி குடும்பத்துடன் காரில் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார்.
மதுராந்தகம் அடுத்த தொழுப் பேடு அருகே நேற்று வந்த போது திடீரென கார் டயர் பஞ்சரானது. இதனால், திண்டிவனம் நோக்கி காரை திருப்பினார். சிறிது தூரத்தில் இருந்த சாலையோர பஞ்சர் கடை முன் காரை நிறுத்தினார். கடையில் தொழுப் பேட்டைச் சேர்ந்த மெக்கானிக் கருணாகரன்(40), டயரை கழட்டி பஞ்சர் ஒட்டும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, சென்னை யிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்த காரின் பின் பக்கம் பயங்கரமாக மோதியது. இதில், கருணாகரன் மற்றும் அந்தோணி உடல் நசுங்கி அதே இடத்திலேயே பலியாயினர்.
தகவல் அறிந்து வந்த அச்சிறுப்பாக்கம் போலீஸார் உடல்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago