அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸார் தனித்தனியாக மாலை அணிவிப்பு: செல்வப்பெருந்தகைக்கு எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளை ஓராண்டு முழுவதும் கொண்டாட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் 31 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு வின் அமைப்பாளராக மாநில எஸ்.சி. பிரிவுத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவிக்கப்பட் டுள்ளார். நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து, வரும் 19-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார்.

எனவே, செல்வப்பெருந்தகை தலைமையில் துறைமுகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மூத்த தலைவர்கள் பலர் இருக்கும்போது செல்வப் பெருந்தகை தலைமையில் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக் கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னாள் எம்எல்ஏ யசோதா, தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE