தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் கடலில் இறங்கி போராட்டம்

'தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், வறட்சி நிவாரணம் கொடுக்க வேண்டும், விவசாயி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் விவசாயிகள் சங்கத்தினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ''தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். வறட்சி நிவாரணம் கொடுக்க வேண்டும்.வறட்சி நிவாரணம் கொடுக்கும் வரை விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு நகை, நிலங்களை ஏலம் விடக்கூடாது. கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், நதிகள் இணைப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள நதிகள் இணைக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு, அதற்கான பணிகளைத் தொடங்கவில்லை என்பதற்காக கண்டிக்கிறோம்.

எங்கள் கோரிக்கைகள் குறித்து முறையிட முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்திக்க முயன்றோம். அதற்கு பலன் கிடைக்கவில்லை'' என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்