மனநலம் பாதித்த மேற்கு வங்க இளைஞர் சகோதரரிடம் ஒப்படைப்பு: ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் ஓராண்டு முயற்சி

கோவையில் மீட்கப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர், அவரது உறவினரிடம் ஒரு வருடம் கழித்து ஒப்படைக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி, கோவை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே காவலர் மூலமாக பிரதீப் (23) என்பவர் மீட்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், பிரதீப் கூறிய பல்வேறு தகவல்களை சேகரித்து, அவருடைய உறவினர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவருக்கு மருத்துவச் சிகிச்சையும் அளித்து வந்தனர். சுமார் ஓர் ஆண்டு தேடுதலின் பலனாக அவரது உறவினர்களின் முகவரி கண்டறியப்பட்டது.

மேற்கு வங்கம், பீர்பாரா அருகே உள்ள ராம்தாலா எனும் பகுதியில்தான் அவரது உறவினர்கள் வசித்து வருவது தெரிய வந்தது. பிரதீப்பின் புகைப்படத்தை அங்குள்ள டீ கம்பெனிகளுக்கு அனுப்பி வைத்த ஈரநெஞ்சம் அறக்கட்டளை, அவர்கள் மூலமாக தேடுதலை மேற்கொண்டது.

இதன் முயற்சியாக, அவரது உறவினர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டு கோவைக்கு வந்தனர். அவர்களிடம், பிரதீப் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டார். சகோதரரை அழைத்துச் செல்வதற்கு வந்த பிரதீப்பின் அண்ணன் மார்டின் கூறும்போது, “கேரளத்தில் என்னோடுதான் பிரதீப் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு விடுமுறைக்கு ஊருக்கு செல்வதாக சொல்லிக் கொண்டு சென்றவர் வீடு போய் சேரவில்லை.

அலைபேசி வசதி எங்கள் ஊரில் சரிவர இல்லாததால் இவர் காணாமல் போனதும் எனக்கு தெரியாது. கடந்த மாதம் நான் விடுமுறைக்கு ஊருக்கு போனபோதுதான், பிரதீப் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

எனது பெற்றோர்களிடம் ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர், பிரதீப் பற்றி அவ்வப்போது பக்கத்து வீட்டினரின் அலைபேசிக்கு தொடர்புகொண்டு பேசி வந்துள்ளனர். ஆனால் எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது தெளிவாக என் பெற்றோருக்கு புரியவில்லை. என்னிடத்திலும் தகவல் தெரிவிக்க முடியாத நிலையில் இருந்துள்ளனர்.

பிரதீப்பை எப்படி கண்டுபிடிப்பது என்ற கவலையில் இருந்தபோதுதான், கடந்த வாரம் மீண்டும் பக்கத்து வீட்டுக்கு அலைபேசியில் ஈரநெஞ்சம் என்று சொல்லி பிரதீப் பற்றி கூறினார்கள். அதனாலேயே பிரதீப் இருக்கும் இடம் தெரிந்து, உடனடியாக தம்பியை அழைத்து செல்ல வந்தேன்” என்றார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்