தரமணியில் துப்புரவு தொழிலாளி கொலை

தரமணி ரயில் நிலையம் அருகே துப்புரவு தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந் தார்.

சென்னை தரமணி ரயில் நிலையம் அருகே நேற்று காலை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தரமணி காவல் நிலையத் துக்கு தகவல் தெரிவித்தனர். அடையாறு துணை ஆணையர் கண்ணன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தி னர். கொலை செய்யப்பட்டது பெருங்குடி அருகேயுள்ள கல்லுக் குட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த முருகன் (38) என்பது தெரிந்தது. அவர் மாநகராட்சியில் துப்பரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த முருகன், சி.டி.யில் படம் பார்த்துள்ளார். படம் சரியாக தெரியாததால் சிடியை மாற்றி வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. கொலை செய்யப்படுவதற்கு முன்பாக அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு முருகன் சென்றதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப் பட்டாரா அல்லது கொள்ளை முயற்சியில் கொலை நடந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE