இந்திய எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக கடலோர காவல் படை யினர் நேற்று முன்தினம் இரவு கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழகம் - ஆந்திரம் இடையே கிருஷ்ணாம்பட்டினம் அருகே இந்திய கடல் எல்லையில் இலங்கை படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்தப் படகை கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்தது தெரியவந்ததால் படகில் இருந்த 5 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் பிடித்து வந்து, சென்னை துறைமுக போலீஸாரிடம் ஒப்படைத்தனர். படகும் அதிலிருந்த ஒன்றரை டன் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட 5 பேரும் இலங்கை திரிகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.
இதேபோல நேற்று முன்தினம் இந்திய எல்லையில் மீன் பிடித்ததாக 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களையும் சேர்த்து சுமார் 30 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago