விவசாயி தற்கொலை... மத்திய அரசுக்கு ஓர் எச்சரிக்கை: ஸ்டாலின்

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவைக் கண்டித்து டெல்லியில் நடைபெற்ற பேரணியின்போது, விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணி.

ஆகவே மத்திய அரசு விவசாயிகள் விரோத நில எடுப்பு மசோதாவை கைவிட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது முகநூல் பதிவில், "நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சிப் பேரணியில் பங்கேற்று விவசாயி தற்கொலை செய்துகொண்ட செய்தி கேட்டு மனம் உடைந்து போனேன். அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலம் பொருளாதாரம் சார்ந்த சொத்து மட்டுமல்ல விவசாயக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்குமான ஆதாரமாகும். பணத்தைக் கொடுத்து ஈடுகட்ட முடியாத அளவிற்கு நிலம் என்பது அந்த நில உரிமையாளர்களின் உணர்வோடு தொடர்புள்ளது.

இந்த தற்கொலை மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணி. ஆகவே உரிய முறையில் செயல்பட்டு விவசாயிகள் விரோத நில எடுப்பு மசோதாவை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மக்கள் விரோத மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE