அண்ணாமலை பல்கலை. விடைத்தாள் மாயமான விவகாரம்: 6 பேர் கைது

சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழக தேர்வுத் துறையில் கடந்த பிப்ரவரி மாதம் விடைத் தாள்கள் மாயமானது.

இது குறித்து விசாரணை மேற் கொள்ளப்பட்டதில், ஊழியர்கள் மாணவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்கள் தேர்வு எழுதிய விடைத் தாள்களுக்கு பதில் வேறு விடைகள் எழுதிய தாளை வைத்தது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். விடைத்தாள் திருட்டு சம்பந்தமாக பல்கலைகழக தேர்வுத்துறை இயக்குநர் ரகுபதி அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பல்கலைக் கழக மைய நூலகத்தில் உதவி யாளராக பணிபுரிந்து வரும் மாரி முத்து (33), அலுவலக உதவியாளர் கள் ராமசாமி (32), சங்கர்(41), கார்த்திகேயன்(30), ஆனந்த்(39), மற்றும் உதவி பேராசிரியர் பாஸ்கர் (35) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE