அண்ணா நூலகத்தை சீரமைக்க வலியுறுத்தி திமுக ஏப்.10-ல் ஆர்ப்பாட்டம்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சீரமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் ஏப்ரல் 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை கோட்டூர்புரத்தில் தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. 2011-ல் ஆட்சி மாறியதும் பராமரிப்பின்றி நூலகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

எனவே, நூலகத்தை சீரமைக்க வலியுறுத்தி கோட்டூர்புரத்தில் 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்