மதுரை காமராஜர் பல்கலை.க்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய குழு நியமனம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துக்கு புதிய துணைவேந்தரை தேர்வுசெய்ய மாநில பிற்படுத்தப்பட் டோர் ஆணைய உறுப்பினர் சி.முருக தாஸ் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் கடந்த 9.4.2012 அன்று நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதன்படி, அவரது பதவிக்காலம் இந்த மாதம் முடிவடைகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மதுரை காமராஜர் பல்கலைக் கழக புதிய துணைவேந்தர் பதவிக்கு 3 பேர் கொண்ட குழுவை ஆளுநருக்கு பரிந்துரை செய்வதற்காக ஒரு தேர்வுக் குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த தேர்வுக் குழுவில், தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினரும் சென்னை பல்கலைக்கழக முன்னாள் பொருளாதாரத்துறை பேராசிரியருமான சி.முருகதாஸ், சென்னையைச் சேர்ந்த ஹரிஸ் எல்.மேத்தா, மதுரையைச் சேர்ந்த மு.ராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பேராசிரியர் முருகதாஸ் குழுவின் அமைப்பாளராக செயல்படுவார். இந்த தேர்வுக்குழு துணைவேந்தர் பதவிக்கு 3 பேர்களை ஆளுநருக்குப் பரிந்துரை செய்யும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்