கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

கூட்டுறவு சங்க ஊழியர்கள் வரும் 6-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் துரைராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அனைத்து ஊழியர்களுக்கும் 1-1-2011 முதல் 31-12-2011 வரை ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத்தொகை வழங்க வேண்டும். பென்ஷன் நிதியத்துக்கு பணம் செலுத்தாத மேலாண்மை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஏப்ரல் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE