ஐஏஎஸ் அதிகாரி கருப்பண்ணன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ஆர்.கருப்பண்ணன் மறை வுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தி:

1969-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக நான் பொறுப்பேற்றிருந்தபோது, என்னுடைய தனிச்செயலாளர் களில் ஒருவராகத் திறம்பட பணியாற்றியவர் எஸ்.ஆர்.கருப் பண்ணன். முதல்வர் அலு வலகத்தில் பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கைகளை இனிய முகத்தோடு அமைதியாக கேட்டுப் பெறுவார்.

அத்துடன் தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்துவிட்டு இரவு 10 அல்லது 11 மணியளவில் தான் வீட்டுக்கு திரும்புவார். அந்த அளவுக்கு அரசுப் பணியில் இறுதி வரை ஆர்வம் கொண்டவர். அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மறைந்துவிட்டார். அவருடைய மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. அவருடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்துவிட்டு இரவு 10 அல்லது 11 மணியளவில் தான் வீட்டுக்கு திரும்புவார். அந்த அளவுக்கு அரசுப் பணியில் இறுதி வரை ஆர்வம் கொண்டவர். அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மறைந்துவிட்டார். அவருடைய மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. அவருடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE