திருவண்ணாமலை மற்றும் செய்யாறு கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கோடை காலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பய னுள்ளதாக இருக்க இலவச விளையாட்டுப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, உலக துடிப்பாளர் நேர்காணல் திட்டத்தின்கீழ் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு பயிற்சி முகாம் 5 நாட்கள் நடைபெறும்.
திருவண்ணமலை கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நாளை (22-ம் தேதி) முதல் 26-ம் தேதி வரை நடைபெறும்.
அதேபோல, செய்யாறு கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை மறுதினம் (23-ம் தேதி) முதல் 27-ம் தேதி வரை நடைபெறும்.
தினமும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை மட்டும் பயிற்சி அளிக்கப்படும்.
முகாமில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ, மாணவி களுக்கும் சிற்றுண்டி, பிஸ்கட், பால் வழங்கப்படும். பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப் படும்.
இந்த பயிற்சி முகாமை மாணவ, மாணவிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.