ரயிலில் தொங்கியபடி சென்ற இளைஞர் மின்கம்பத்தில் மோதி பலி

சென்னை கடற்கரைக்கு திருமால்பூரில் இருந்து நேற்று காலை மின்சார ரயில் வந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏராளமானோர் ரயில் பெட்டி வாசலில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

மீனம்பாக்கம் நிலையம் அருகே ரயில் வந்தபோது, தொங்கியபடி வந்த இளைஞர் ஒருவரின் தலை மின்கம்பத்தில் மோதியது. இதில் கீழே விழுந்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பழவந்தாங்கல் நிலையத்துக்கு ரயில் வந்த பின்னர்தான் விபத்து குறித்து ரயில் ஓட்டுநருக்குத் தெரிந்தது. உடனே அவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர் இரும்புலியூரைச் சேர்ந்த ராகவேந்திரன் (27) என்று தெரிந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE