காஞ்சிபுரம் மாவட்டத்தில் 28-ல் சாதிவாரிக் கணக்கெடுப்பு வரைவு பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

சமூகப் பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பின் வரைவு பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த வரைவு பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக அரசு அலுவலகங்களில் வைக்கப்பட உள்ளது. ஆட்சேபணைகள் ஏதே னும் இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில், சமூகப் பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் கடந்த 2011-12-ம் ஆண்டு நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதால், இதன் வரைவு பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதை நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வார்டு அளவிலான பொது இடங்களில் மக்களின் பார்வைக்காக வைக்கப் படும்.

பட்டியலில் உள்ள விவரங்கள் குறித்து பொதுமக்களால் தெரிவிக் கப்படும் ஆட்சேபனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக் களை பெறுவதற்கு நகரப்பகுதியில் வார்டு நிலை அலுவலர்கள் மற் றும் ஊரகப் பகுதிகளில் ஊராட்சி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

இதுதொடர்பாக வரும் மே 1-ம் தேதி ஊராட்சிகளில் நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும். கோரிக்கை மனுக்களை அந்தந்த நிலை அலுவலர்களின் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கலாம். இவ் வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE