மீன்பிடி தடைக்காலம் இன்று தொடக்கம்

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்றுமுதல் தொடங்குகிறது. இதனால் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 ன் படி, தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன் இனப் பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் மே 29 வரை 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் இன்று (15-ம் தேதி) தொடங்கி 45 நாட்கள் அமலில் இருக்கும். இதன் காரணமாக, மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE