திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர், மயிலம் முருகன் கோயிலுக்கு நேற்று காலை ஒரு லாரியில் புறப்பட்டனர். விழுப்புரத் துக்கு முன்பாக கண்டாச்சிபுரம் அருகே உள்ள கீழ்வாளை கிராமம் வழியாக லாரி சென்றபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து லாரி ஓடியது. பின்னர், சாலையோரம் இருந்த ஒரு புளிய மரத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில், லாரியில் இருந்த முருகன் (45), ஏழுமலை என்பவரின் மகன் கோபி (13), ஏழுமலை மனைவி ரேவதி (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பெண்கள் உள்ளிட்ட 43 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கெடார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் சேர்த்தனர். மிகவும் கவலைக்கிடமாக இருந்த 5 பேரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேலு என்பவரின் மகன் விக்னேஷ் (15) மற்றும் கெடார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டிருந்த பழனிவேலு (55) ஆகிய இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கண்டாச்சிபுரம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago