ஏப்ரல் 19-ல் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் வின்சென்ட் பால்ராஜ் தலைமையில் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

மாநிலப் பொருளாளர் நம்பிராஜ், துணைத் தலைவர்கள் எழிலரசன், ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து, ஆண்டுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், வருமான வரி விலக்குத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தல் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உண்ணாரதப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE