ஏப்.14-ல் காவிரி நீர் வேலூரை வந்தடையும்: அமைச்சர் வீரமணி

திட்டமிட்டபடி வரும் 14ஆம் தேதி காவிரி நதிநீர் வேலூரை வந்தடையும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்துள்ளார்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாமல் அரசு இழுத்தடிப்பதாகவும் அதை கண்டித்து நாளை மறுநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.

ஒகேனக்கல் குடிநீர் திட்ட செயல்பாடுகள் மற்றும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள நீர் நிலை தொட்டிகளை அமைச்சர் கே சி வீரமணி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துப் பேசினார்.

''விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும். ஒரு வாரத்தில் திட்டம் நிறைவேறும் என்று தெரிந்த பிறகும், நாம் ஆர்ப்பாட்டம் நடத்தியதால்தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேறியது என்ற சூழலை எடுத்துச்செல்ல வேண்டுமென்று துரைமுருகன் நினைக்கிறார்.

தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும் வரும் 14ஆம் தேதி திட்டமிட்டபடி காவிரி நீர் வேலூரை அடையும்'' எனவும் வீரமணி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE