வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: தலைமைப் பொறியாளரின் ஜாமீன் மனு விசாரணை - 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருநெல்வேலியில் வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதாகி சிறையிலுள்ள தலைமைப் பொறி யாளர் செந்திலின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட் டுள்ளது.

திருநெல்வேலி வேளாண் பொறியியல்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அவர்களை வரும் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் இருக்கும் தலைமைப் பொறியாளர் செந்தில் ஜாமீன் கேட்டு கடந்த 6-ம் தேதி திருநெல்வேலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி நசீர்அகம்மது முன்னிலையில் வந்தது. செந்திலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

அரசு தரப்பில் ஆஜரான வழக் கறிஞர் சிவலிங்கமுத்து, இந்த வழக்கு முதல் கட்ட விசாரணை யில் உள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் விவரங்கள் தெரி விக்க வேண்டியிருக்கிறது. மேலும் ஜாமீனில் அவரை விடுவித்தால் வழக்கின் சாட்சியங்களை அவர் கலைக்கக்கூடும் என்று ஜாமீன் அளிக்க ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு நீதிபதி நசீர் அகமது ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE