நவீன ஓவியர்களில் ஒருவரான எஸ்.என். வெங்கடராமன் அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் காலமானார். அவருக்கு வயது 77.
சென்னை துறைமுகத்தில் சிஸ்டம்ஸ் அனலிஸ்ட்டாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் எஸ்.என்.வெங்கடராமன். சென்னை கவின்கலைக் கல்லூரியில் செயல்பட்ட ‘மெட்ராஸ் ஆர்ட் கிளப்’ என்ற தன்னார்வ ஓவியர் குழுவில் முக்கிய பங்காற்றினார்.
அமெரிக்காவில் உள்ள மகன் வீட்டில் இருந்த அவர் சமீப காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 19-ம் தேதி அவர் உயிரிழந்தார். எஸ்.என்.வெங்கடராமன் மாநில விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றவர்.