வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் ‘சீட்' வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை தி.நகர் வைத்தியராமன் தெருவில் 'நார்த் அமெரிக்கன் சர்வீஸ் சென்டர்' என்ற நிறுவனம் உள்ளது. கவுரிவாக்கம் விஜிபி சாலை 2-வது தெருவில் வசிக்கும் சுப்ரியா(28) என்பவர் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் அமெரிக்கா, கனடா, உக்ரைன், ஜெர்மனி, மலேசியா, சீனா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 'சீட்' வாங்கித் தருவதாக இணையதளம் மூலம் விளம்பரம் செய்தார்.
இந்த விளம்பரத்தை பார்த்து பலர் சுப்ரியாவிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர் கூறியபடி மருத்துவப் படிப்புக்கான சீட்டை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பலர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் அப்பாத்துரை விசாரணை நடத்தி சுப்ரியாவை நேற்று முன்தினம் கைது செய்து புழல் சிறையில் அடைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago