சிவில் நீதிபதி பதவிக்கான நேர்முகத் தேர்வுக்கு மனிதநேய ஐஏஎஸ் கல்வியகம் சார்பில் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக மனிதநேய ஐஏஎஸ் கல்வியகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டிஎன்பிஎஸ்சி 162 சிவில் நீதிபதி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வை நடத்தியது இதில் மனிதநேய ஐஏஎஸ் கல்வியகத் தில் பயிற்சி பெற்ற 89 மாணவர்கள் வெற்றிபெற்று நேர்முகத் தேர் வுக்கு செல்கின்றனர். இவர்க ளுக்கு இம்மையத்தில் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் வெளி யில் பயின்று எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களும் பங்கேற்கலாம்.
இதில் பங்கேற்க விரும்பு வோர் 044- 24358373, 8428431107 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.